இலங்கையில் புதிதாக Freedom Packs யை ஏர்டல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பழைய Package களை நீக்கி, 4G தொழில் நுட்பத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த Package களைப் பயன்படுத்துவதில் ஒரு புதிய சிக்கல் நிலைமை Airtel பாவனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
![](https://tamiltechbits.wordpress.com/wp-content/uploads/2021/10/airtel-freedom-packs.jpg?w=581)
முன்னர் Reload/Recharge செய்தால் நமது கணக்கின் நிலுவை அதிக காலத்திற்குச் செல்லுபடியாகும் விதத்தில் Airtel அதனை முகாமைத்துவம் செய்துவந்தது. இதன் காரணமாக தமது இரண்டாவது SIM ஆக Airtel யைப் பலர் பயன்படுத்தி வந்தனர். அதற்கு மிக முக்கிய காரணம் அவர்களிடம் இருந்து கிடைக்கும் சலுகை விலையிலான Internet Data Packages ஆகும். விரும்பிய நேரத்திற்கு விரும்பிய Package யைச் செயற்படுத்தக் கூடியதாக இருந்த அதே வேளை, Reload/Recharge செய்யப்பட்ட நமது பணம் அவர்களின் கணக்கில் நிலுவையாக அதிக காலம் வைத்திருக்கக் கூடியதாக இருந்தது.
ஆனால் Freedom Packs அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், கணக்கு நிலுவையின்(Account Balance) காலம்(Expiry Date) குறைக்கப்பட்டுள்ளது. 4G Data Top-Up இற்கு அவர்கள் காலக்கெடு கொடுக்காமல் “கணக்கு செயற்பாட்டில் இருக்கும் வரையில்” என்ற நிபந்தனை கொடுக்கப்பட்டதன் விளைவாகக் கூட இது இருக்கும். இதன் காரணமாக நாம் Reload/Recharge செய்தால் Account Balance இன் Expiry Date வழமை போல அதிகரிக்காது. அவர்களின் Freedom Packs இல் குறைந்த்து. 48 ரூபாவின் Package யை செயற்படுத்தினால் தான் 15 நாட்களுக்காவது Connection Active ஆக இருக்கும். 15 நாட்கள் கடந்த பின்னர் Reload/Recharge செய்யாவிட்டால், நம்மால் எந்த அழைப்பையும் ஏற்படுத்த முடியாத நிலைமை ஏற்படும். Incoming Calls, and Messages யை மாத்திரமே பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். Account Balance உம் காலாவதியாக வாய்ப்பு உள்ளது. நீங்கள் பாவிக்கிறீங்களோ! இல்லையோ! அவர்களின் ஒரு Package யை செயற்படுத்தியே ஆக வேண்டும் என்று நம்மை அவர்கள் நிர்ப்பந்தித்துள்ளது போல தெரிகிறது.
இது யாருக்குப் பிரச்சனையான விடையம்? Airtel யை தமது Internet Data தேவைகளுக்காக “மாத்திரம்” பாவிப்பவர்களுக்கு இது பிரச்சனையாகும். மற்றும்படி இந்த Freedom Packs ஆனது ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தெரிவாகும்.